/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுடுசோறுடன் வேட்டைக்கு சென்ற வினோத திருவிழா சுடுசோறுடன் வேட்டைக்கு சென்ற வினோத திருவிழா
சுடுசோறுடன் வேட்டைக்கு சென்ற வினோத திருவிழா
சுடுசோறுடன் வேட்டைக்கு சென்ற வினோத திருவிழா
சுடுசோறுடன் வேட்டைக்கு சென்ற வினோத திருவிழா
ADDED : மார் 12, 2025 06:24 AM
நிலக்கோட்டை; மணியக்காரன்பட்டி கருப்பணசாமி கோயில் மாசி திருவிழாவில் சுடுசோறுடன் வேட்டைக்கு செல்லும் வினோத திருவிழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த இவ்விழாவில் கரகம் எடுத்து வரும் நிகழ்வை தொடர்ந்து நேர்த்திக் கடனாக 50க்கு மேற்பட்ட ஆடுகள் கருப்பண சுவாமிக்கு பலியிடப்பட்டன.
தொடர்ந்து சுவாமி பாரி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக சுடச்சுட சோறு படைத்து குழம்பு வைத்து சூடான சாப்பாட்டை மஞ்சள் துணியில் கட்டிக்கொண்டு வில், அம்புடன் கருப்பணசுவாமி வேட்டைக்கு கிளம்பினார்.
சின்ன கருப்பு, பெரிய கருப்பு, அங்காள ஈஸ்வரி, பேச்சியம்மாள் உள்ளிட்ட 21 தெய்வங்கள் உடன் செல்ல மணியக்காரன்பட்டி கிராமத்தினர் பாரி வேட்டைக்கு ஊர்வலமாக சென்றனர். வீரப்பன் தெப்பத்தில் நிறைவடைந்த ஊர்வலத்திற்கு பின் சமைத்துக் கொண்டு வரப்பட்ட சாப்பாடு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.