/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ -கழிவுகளின் கிட்டங்கியாய் உருமாறிய தர்மதெப்பக்குளம் -கழிவுகளின் கிட்டங்கியாய் உருமாறிய தர்மதெப்பக்குளம்
-கழிவுகளின் கிட்டங்கியாய் உருமாறிய தர்மதெப்பக்குளம்
-கழிவுகளின் கிட்டங்கியாய் உருமாறிய தர்மதெப்பக்குளம்
-கழிவுகளின் கிட்டங்கியாய் உருமாறிய தர்மதெப்பக்குளம்

ஆக்கிரமிப்பு தாராளம்
ஜெயராஜ்,ஏ.டி.எஸ்., நகர் குடியிருப்போர் சங்க முன்னாள் தலைவர், சின்னாளபட்டி : ஏ.டி.எஸ்., நகர் குடியிருப்போரின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இக்கண்மாய் இருந்து வருகிறது. இது மட்டுமின்றி பிருந்தாவனத்தோப்பு ராம அழகர் கோயில் கிணற்றின் தண்ணீர் ஆதாரமாகவும் உள்ளது. அம்பாத்துறையில் இருந்து நான்கு வழிச்சாலை ஓரத்தில் வாய்க்கால் அமைந்துள்ளனர். இவை முறையாக பராமரிப்பதோ, துார் வாருவதோ இல்லை. மழை நீர் முழுமையாக தடைப் பட்டுள்ளது. இக்கண்மாயின் நீர் வரத்து பகுதிகள் முழுமையாக துார்ந்து கிடக்கிறது. இப்பகுதி வணிக நிறுவனங்கள், வரத்து வழித்தடத்தில் விறகு, கழிவுகளை குவிக்கின்றனர். மொத்த பரப்பளவில் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்ய கண்மாயின் பரப்பளவு குறைந்து வருகிறது. சுற்றிய குடியிருப்புவாசிகள் இங்கு குப்பை குவிக்கும் அவல நிலை உள்ளது. கண்மாயை துார் வாரி பல ஆண்டுகளான நிலையில் புதர் செடிகள் அடர்ந்து கிடக்கிறது.
அதிகாரிகள் அலட்சியம்
பாண்டி, சலவைத்தொழிலாளி, சாமியார்பட்டி : சுற்றுப்புற பகுதிகளுக்கான முக்கிய நிலத்தடி நீராதாரமாக இக்கண்மாய் இருந்தது. குடிநீர் ஆதாரமாக இருந்த பாரம்பரியம் இதற்கு உண்டு. வெளியூர் வியாபாரிகள், விவசாயிகள், இவ்வழியே செல்வோர் என பலர் இங்கு உணவருந்தி ஓய்வெடுக்கும் பகுதியாக இருந்துள்ளது. பராமரிப்பில் அலட்சியத்தால் தற்போது கழிவுகள் குவியும் குட்டையாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை. குவிக்கப்படும் குப்பைகளால் துார்ந்துள்ளது. இப்பகுதியில் சலவைத்துறை ஏற்படுத்தி நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு உறுதிப்படுத்தியது. அதன் பின் கண்மாயை பராமரிப்பது சலவைத் துறை மேம்படுத்தல் போன்ற பணிகளில் தொழிலாளர்களின் கோரிக்கை நீடித்த போதும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
சீரமைப்பு தேவை
சண்முகவேல்,தமிழ்நாடு வண்ணார் சமுதாய எழுச்சி நல பேரவை, மாநில செயலாளர், சின்னாளபட்டி : பேரூராட்சி குடியிருப்புகள் மட்டுமின்றி வணிக நிறுவனத்தினர் இப்பகுதியில் கழிவுகளை கொட்டுகின்றனர். இறைச்சி, மருத்துவ கழிவுகளை ரோட்டோரங்களில் குவிக்கின்றனர். இவற்றிற்காக காத்திருக்கும் தெரு நாய்களால் பலர் பாதிப்படைகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் உள்ளிட்டோரை நாய்கள் கடித்து தாக்கும் அவலம் தொடர்கிறது. இங்குள்ள கழிவுகளால் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. கொசுத்தொல்லை, விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் இப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர். முறையான தெரு விளக்கு வசதி இப்பகுதியில் இல்லை. இருள் சூழ்ந்த நிலையில் போதிய பாதுகாப்பற்ற சூழலில் நடமாடும் அவலம் உள்ளது.