Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

ADDED : ஜூலை 05, 2024 12:13 AM


Google News
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த வகுரப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 35 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

இங்கு கடந்த, 2016 முதல், தமிழ்மணி என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்தார். பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, 8 ஆக இருந்த நிலையில், அவர் வீடு வீடாக சென்று பெற்றோரிடம் பேசி, மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர்களின் தனித்திறமையை கண்-டறிந்து ஊக்குவித்தார்.கடந்த, 2ல் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், செங்குட்டை அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றார். அவருக்கு பதில், வசந்தி என்பவர், வகுரப்பம்பட்டி அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நேற்று காலை, 9:00 மணிக்கு தலைமையாசிரியர் தமிழ்மணியை மீண்டும், வகுரப்பம்பட்டி துவக்கப்பள்ளி தலைமையாசிரியராக நியமிக்க வலியுறுத்தி மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்-பாமல் பள்ளி நுழைவாயில் முன், பெற்றோர் மற்றும் பொது-மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர் கணேஷ், காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ், கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஆகியோர் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாதத்-திற்குள் தலைமையாசிரியர்கள் இருவரிடமும் கடிதம் பெற்று, பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மாண-வர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.முன்னதாக பணி மாறுதலில் சென்ற தமிழ்மணி, பள்ளிக்கு வந்து மாணவ, மாணவியரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் மாணவ, மாணவியர் கண்ணீர் விட்டு அழு-தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us