கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 12:13 AM
பாலக்கோடு: பாலக்கோடு டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறி-வியல் கல்லுாரியில், 73 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லுாரி முன் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில், பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரி-வோருக்கு, 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை உடனே வழங்க வேண்டும். அரசாணை, 56 ன் படி, இவர்களை பணி நிரந்-தரம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த, 2019ம் ஆண்டு முதல் மாதம் 50,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு, கற்பித்தல் பணி அனுபவத்துக்கு ஆண்டுக்கு தலா, 2 மதிப்பெண் வழங்கி, 15 ஆண்டுகளாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, எழுத்துத் தேர்வை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஒதுக்கீடாக, 4 சத-வீதம் வழங்க வேண்டும். மகப்பேறு மருத்துவ விடுப்பு மற்றும் இறந்தவர்களுக்கு இழப்பீடும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுதி-யமும் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்-டத்தில், 70க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.