/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்
சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்
சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்
சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்
தென்னிந்திய ஹாக்கி போட்டி தமிழக அணி வீரர்கள் வெற்றி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்னிந்திய அளவிலான, 3 நாள் ஹாக்கி போட்டி கடந்த, 15 அன்று தொடங்கியது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த, 18 அணிகளை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இறுதி போட்டியில், தமிழ்நாடு சார்பாக பாலக்கோடு அணியும், பாண்டிச்சேரி அணியும் மோதின. போட்டி முடிவில், 4 க்கு, 5 என்ற கோல் கணக்கில் பாலக்கோடு அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. பாண்டிச்சேரி அணி, 2ம் இடமும், 3ம் இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட அணியும் பெற்றன.
தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்றத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடத்துாரிலுள்ள மன்ற அலுவலகத்தில் தலைவர் பாவலர் மலர்வண்ணன் தலைமையில் நடந்தது. பாவலர் முல்லையரசு, கூத்தப்பாடி பழனி, நுாலகர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் தமிழ்மகன் இளங்கோ வரவேற்றார்.
விபத்தில் முன்னாள் பஞ்., தலைவர் உயிரிழப்பு
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மோளையானுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 41; இவர் கடந்த, 2014ல் மோளையானுார் பஞ்., தலைவராக இருந்தார். மேலும், அ.தி.மு.க.,வில் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவராக பொறுப்பில் இருந்து வந்தார். கடந்த, 15 அன்று பெரியாம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றார்.
விபத்தில் காயமடைந்தோரை ஜி.ஹெச்.,ல் சேர்த்த எம்.எல்.ஏ.,
அரூர்: அரூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அவர்களை தன் காரில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.
பசு மாடுகளை திருடி விற்ற 6 பேர் கைது
தர்மபுரி: மாரண்டஹள்ளி சுற்றுவட்டாரத்தில், பசு மாடுகளை திருடி விற்ற, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.