Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்

அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்

அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்

அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்

ADDED : செப் 23, 2025 01:48 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம் வரும், 30 அன்று காலை, 11:00 மணிக்கு தர்மபுரி கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் தபால் சேவை தொடர்பான புகார் இருந்தால், அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகங்கள் போன்ற முழு விபரங்களுடன் புகார்களை அனுப்ப வேண்டும்.

மேலும், அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருந்தால், முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி தபால் அலுவலகத்தின் விபரங்கள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட முழு விபரங்கள் அடங்கிய புகாரை அனுப்பும் அஞ்சல் கவரின் மீது, Dak Adalat case என குறிப்பிட்டு, புகார்களை அஞ்சல் வாடிக்கையாளர்கள் வரும், 26க்குள் கிடைக்கும் படி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தர்மபுரி கோட்டம், தர்மபுரி, 636701 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us