ADDED : பிப் 25, 2024 03:51 AM
மகேந்திரமங்கலம்: பாலக்கோடு அடுத்த கருக்கனஹள்ளியை சேர்ந்தவர் லோகேஸ்வரி, 35; இவர் ஓசூரிலுள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
தினமும் பணி முடிந்தவுடன் தன் டி.வி.எஸ்., மொபட்டில் வெள்ளிசந்தையில் இருந்து வீடு திரும்புவார். கடந்த, 22ல் கருக்கனஹள்ளியில், பின்னால் பைக்கில் வந்த நபர், லோகேஸ்வரி அணிந்திருந்த, 3.5 பவுன் தாலிசெயினை பறித்து தப்பினார். புகார் படி, மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.