Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/புதிய வழித்தட நீட்டிப்பில் அரசு பஸ்கள் இயக்கம்

புதிய வழித்தட நீட்டிப்பில் அரசு பஸ்கள் இயக்கம்

புதிய வழித்தட நீட்டிப்பில் அரசு பஸ்கள் இயக்கம்

புதிய வழித்தட நீட்டிப்பில் அரசு பஸ்கள் இயக்கம்

ADDED : ஜூலை 09, 2024 05:59 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில், புதிய வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்ட, 5 வழித்தடங்களில் கலெக்டர் சாந்தி மற்றும் தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இதில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பஸ் வசதி அளிப்பதற்காக தட நீட்டிப்பு, தடமாற்றம் செய்து நேற்று முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், தர்மபுரி மாவட்டத்தில், காமராஜ் நகர், எட்டிகுழி, கலப்பம்பாடி மற்றும் சஞ்சீவன்கொட்டாய் ஆகிய கிராமங்கள், வழி நீட்டிப்பு மற்றும் மாற்றி இயக்கப்படும் வழித்தடங்களின் மூலம், பஸ் வசதி பெறுகிறது. இதன் மூலம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர். மேலும், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் வேண்டுகோளின் படி, பெங்களூரு பஸ்கள் முதல், அனைத்து விரைவு பஸ்களும் நிறுத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதில், அரசு போக்குவரத்துக் கழக தர்மபுரி மண்டல பொது மேலாளர் செல்வம், தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி, துணை மேலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு போக்குவரத்துக் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us