/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு
அரசு பள்ளி மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு
அரசு பள்ளி மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு
அரசு பள்ளி மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு
ADDED : செப் 02, 2025 01:34 AM
தர்மபுரி;தர்மபுரி அடுத்துள்ள, மூக்கனஹள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் சென்னை, அடையாறு புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் நடமாடும் ஊர்தி மூலம், மாணவர்களுக்கு புற்றுநோய் குறித்த, விழிப்புணர்வு நிழ்ச்சி நேற்று நடந்தது.
தலைமையாசிரியர் சின்னசித்தன் புற்று நோய் கண்காட்சி விழிப்புணர்வு நடமாடும் ஊர்தியை அறிமுக விளக்கம் செய்தார். இதில், அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் உதவி மேலாளர் ரங்கேஷ் மாணவ, மாணவியருக்கு புற்று நோய் வருவதற்கான காரணங்கள், அவற்றை தவிர்க்கும் முறை, ஆரோக்கியமான உணவின் அவசியம், புற்றுநோயின் வகைகள் குறித்து எடுத்து கூறினார். இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.