/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 40 ஆண்டாக துார்வாராத அணை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம் 40 ஆண்டாக துார்வாராத அணை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்
40 ஆண்டாக துார்வாராத அணை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்
40 ஆண்டாக துார்வாராத அணை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்
40 ஆண்டாக துார்வாராத அணை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்
ADDED : செப் 02, 2025 05:32 AM
காரிமங்கலம்: தும்பலஹள்ளி அணை வாய்க்கால்கள் 40 ஆண்டுகளாக துார்வாரப்படாமல், செடிகள் சூழ்ந்து கிடப்பதை சீரமைக்க, தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் தும்பலஹள்ளி அணையில் நடந்தது.
இதில், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, தும்பலஹள்ளி அணைக்கு மழைக்கால உபரிநீர் கொண்டு வரும் திட்டமான, கிருஷ்ணகிரி எண்ணேகோல்புதுார் தென்பெண்ணையாற்றில் இருந்து வறண்ட பகுதிகளுக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை, 2026க்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தும்பலஹள்ளி அணை வலது, இடது வாய்க்கால்கள், 40 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளன. அதிலுள்ள செடிகளை அப்புறப்படுத்தி, வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்.
பாலக்கோடு தாலுகா, எலங்காபட்டி ஏரியில் இருந்து பூமாத்தனஹள்ளி ஏரி வரை, நீர்வழிப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகள் பெற்ற வேளாண் வங்கி கடன்களை மத்திய - மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.