ADDED : ஜூன் 30, 2025 04:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில் நேற்று நடந்த வெற்றிலை வாரச்சந்தையில் தர்ம-புரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபா-ரிகள் வந்திருந்தனர். சந்தையில், 20க்கும் மேற்பட்ட கிராமங்-களை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கடந்த வாரம், 128 கட்டுகளைக் கொண்ட, ஒரு மூட்டை வெற்றிலை, 4,000 முதல், 8,000 ரூபாய் வரை விற்றது. நேற்று, 4,000 முதல், 10,000 ரூபாய் வரை விற்ப-னையானது. கடந்த வாரத்தை விட, 2,000 ரூபாய் விலை கூடுத-லாக விற்பனையானது. சந்தையில், நேற்று மொத்தம், 20 வெற்-றிலை மூட்டைகள், 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.