Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மின்கம்பி இழுப்பதில் தகராறு இரு பெண்கள் அதிரடி கைது

மின்கம்பி இழுப்பதில் தகராறு இரு பெண்கள் அதிரடி கைது

மின்கம்பி இழுப்பதில் தகராறு இரு பெண்கள் அதிரடி கைது

மின்கம்பி இழுப்பதில் தகராறு இரு பெண்கள் அதிரடி கைது

ADDED : பிப் 24, 2024 03:52 AM


Google News
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த தானனுார் கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி ராமக்காள், 45. விவசாயி. இவரது தந்தை, 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய கிணற்றுக்கு இலவச மின்சாரம் பெற்றார். அதற்காக, இவரது வீட்டின் அருகே மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி செல்வராணி, 29, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தார்.

இதில் மின் கம்பிகள் தனது நிலத்தின் மீதும், வீட்டின் மேலும் செல்கிறது. அதனை மாற்றி அமைக்க வேண்டும் என ராமக்காள் கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, பின் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இருவரும் கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் ராமக்காள், செல்வராணி இருவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us