/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாரச்சந்தை வளாகம் இல்லாததால் ராமநத்தத்தில் போக்குவரத்து நெரிசல் வாரச்சந்தை வளாகம் இல்லாததால் ராமநத்தத்தில் போக்குவரத்து நெரிசல்
வாரச்சந்தை வளாகம் இல்லாததால் ராமநத்தத்தில் போக்குவரத்து நெரிசல்
வாரச்சந்தை வளாகம் இல்லாததால் ராமநத்தத்தில் போக்குவரத்து நெரிசல்
வாரச்சந்தை வளாகம் இல்லாததால் ராமநத்தத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 15, 2025 02:24 AM
ராமநத்தம்: ராமநத்தத்தில் வாரச்சந்தை வளாகம் இல்லாததால், வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
சென்னை - திருச்சி, கடலுார் - திருச்சி, விருத்தாசலம் - ஆத்துார் சாலையில் ராமநத்தம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் எளிதில் செல்ல முடிவதால் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், சுற்றுப்புற கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக தினசரி வந்து செல்கின்றனர். ராமநத்தம் ஊராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாரச்சந்தை நடக்கிறது.
இங்கு, வாரச்சந்தை வளாகம் இல்லாததால் ராமநத்தம் கூட்டுரோடு, கொரக்கவாடி சாலை, பழைய ராமநத்தம் சாலைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, இருசக்கர வானகங்கள கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொது மக்கள், பயணிகள் அவதியடைகின்றனர். எனவே, ராமநத்தத்தில் வாரச்சந்தை வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.