Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடலை கொண்டு வர மனு

வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடலை கொண்டு வர மனு

வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடலை கொண்டு வர மனு

வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடலை கொண்டு வர மனு

ADDED : செப் 15, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
கிள்ளை: சவுதி அரேபியாவில், கார் விபத்தில் இறந்த வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டரிடம், குடும்பத்தினர் மனு அளித்தனர்.

சிதம்பரம் அடுத்த தா.சோ.பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 34; இவருக்கு, தமிழச்சி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சவுதி அரேபியா நாட்டில் தங்கி ரமேஷ் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

காரில், தினமும் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த 12ம் தேதி காரில், ரமேஷ் உட்பட 5 பேர் வேலைக்கு சென்றனர். அப்போது, கார் விபத்துக்குள்ளானதில் ரமேஷ் உட்பட 3 பேர் இறந்தனர். தகவலறிந்த, ரமேஷ் குடும்பத்தினர் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us