ADDED : மார் 22, 2025 08:47 PM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பொறியியல் புலம் கட்டமைப்பியல் துறையில் 'ஸ்ட்ரெஸ்- 25' என்ற தலைப்பில் மாணவர் மன்ற கருத்தரங்கு நடந்தது.
புல முதல்வர் கார்த்திகேயன்தலைமை தாங்கி மாணவர் மன்றசெயல்பாடுகளின் தொகுப்பிதழை வெளியிட்டார். துறைத் தலைவர் குமரன் வரவேற்றார். என்.அன்.டி., நிறுவனமேலாளர் நாகராஜன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியைஹரிபாலன், தனுஷா தொகுத்து வழங்கினர். கட்டமைப்பு துறைத் மாணவர் மன்றஆலோசகர்கள் பேராசிரியர்கள் பழனிபால்சன்,மாணவர் மன்ற தலைவர் சர்வேஷ் குப்தா,பொதுச் செயலாளர் ஜான் கிளாஸ்டன் நிகழ்ச்சி ஏற்பாடுகளைசெய்திருந்தனர்.பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.