Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க கோரிக்கை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க கோரிக்கை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க கோரிக்கை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க கோரிக்கை

ADDED : ஜூலை 05, 2025 03:18 AM


Google News
Latest Tamil News
பெண்ணாடம்: வெண்கரும்பூரில் பராமரிப்பின்றி காணப்படும் பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. போதிய பராமரிப்பின்றி உள்ள குடிநீர் தொட்டியில் பில்லர் மற்றும் பல இடங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க அச்சம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, வெண்கரும்பூரில் பராமரிப்பின்றி காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us