Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வேகத்தடையில் மோதி பெயிண்டர் பலி

வேகத்தடையில் மோதி பெயிண்டர் பலி

வேகத்தடையில் மோதி பெயிண்டர் பலி

வேகத்தடையில் மோதி பெயிண்டர் பலி

ADDED : ஜூலை 05, 2025 03:19 AM


Google News
நெல்லிக்குப்பம்: பைக்கில் சென்ற பெயிண்டர், வேகத்தடையில் மோதி இறந்தார்.

பண்ருட்டி அடுத்த மாளிகைமேட்டை சேர்ந்தவர் ஜோதி மகன் ஆகாஷ்,27; பெயிண்டர். இவர், கடந்த 2ம் தேதி இரவு தனது பைக்கில் நெல்லிக்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மேல்பட்டாம்பாக்கம் அருகே வந்த போது, திடீரென வேகத்தடையில் மோதி துாக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us