Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நிதி நிறுவன ஊழியரின்  பைக் திருட்டு  

நிதி நிறுவன ஊழியரின்  பைக் திருட்டு  

நிதி நிறுவன ஊழியரின்  பைக் திருட்டு  

நிதி நிறுவன ஊழியரின்  பைக் திருட்டு  

ADDED : ஜூலை 05, 2025 03:18 AM


Google News
திட்டக்குடி: திட்டக்குடி அருகே நிதி நிறுவன ஊழியரின் பைக், மொபைல் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திட்டக்குடி அடுத்த மருதத்துார், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 29; திட்டக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஆவினங்குடி அருகே உள்ள வேம்புடையார் கோவிலில் உடல் அசதி காரணமாக துாங்கினார்.

இரவு 7:00 மணிக்கு எழுந்து பார்த்த போது தனது பைக் மற்றும் பைக்கின் டேங்க் கவரில் வைத்திருந்த மொபைல் போன் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us