Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொதுத் தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசு

பொதுத் தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசு

பொதுத் தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசு

பொதுத் தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசு

ADDED : ஜூன் 24, 2025 07:43 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2024 - 25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மாணவர்கள் ராகவன், கிருபாகரன், சக்திவேல், பிளஸ் 1 மாணவர்கள் பரணிதரன், சந்தோஷ்குமார், சிவா, மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தினேஷ், ரங்கராஜன், யோகேஷ் ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றனர்.

இம்மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. சங்க துணைத் தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வினோத்குமார் வரவேற்றார்.

துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் சீனிவாசன், ரங்கராஜ், சோமு, ரமேஷ், வெங்கடகிருஷ்ணன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, கேடயம், ஊக்கத்தொகை வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us