Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் அரசு கலை கல்லுாரியில் இன்று 3ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

கடலுார் அரசு கலை கல்லுாரியில் இன்று 3ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

கடலுார் அரசு கலை கல்லுாரியில் இன்று 3ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

கடலுார் அரசு கலை கல்லுாரியில் இன்று 3ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

ADDED : ஜூன் 24, 2025 07:43 AM


Google News
கடலுார்: கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை மூன்றாம் கட்ட பொது கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

இதுகுறித்து கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லுாரியில் 2025-26ம் ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு இன்று (24ம் தேதி) துவங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.

மூன்றாம் கட்ட கலந்தாய்வில், ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு கட்ட கலந்தாய்வில் பங்கு பெற்று இடம் கிடைக்காத மாணவர்கள், கடந்த 14ம் தேதி வரை புதியதாக விண்ணப்பித்த மாணவர்கள் என, அனைத்து தரப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவில் இடம் காலியாக இருந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும். மாணவர்கள் சேர்க்கை தமிழக அரசின் தரவரிசை பட்டியல் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் ஒற்றைச் சாரளர் முறையில் நடக்கிறது.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அசல் கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், டி.என்.ஜி.ஏ.எஸ்.எ.,வில் டவுன்லோடு செய்த விண்ணப்ப படிவம் மற்றும் இதர ஆவணங்கள் அசல் மற்றும் மூன்று நகல்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.

கலந்தாய்விற்கு வரும் போது, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் வரவேண்டும். காலை 9:30 முதல் 11:00 மணிக்குள் கல்லுாரிக்கு வருகை தந்து பெயர் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us