Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.3.69 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்

ரூ.3.69 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்

ரூ.3.69 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்

ரூ.3.69 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்

ADDED : ஜூன் 24, 2025 07:42 AM


Google News
Latest Tamil News
கடலுார் : கடலுாரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 72 பயனாளிகளுக்கு ரூ.3.69 லட்சம் மதிப்பில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஷபானா அஞ்சும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

பொதுமக்களிடம் இருந்து 450 மனுக்கள் பெறப்பட்டன. இதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது பரிசீலனை செய்து தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியன சார்பில் 72 பயனாளிகளுக்கு 3,69,600 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us