மினி பஸ் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
மினி பஸ் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
மினி பஸ் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 16, 2025 12:49 AM
மந்தாரக்குப்பம் : நெய்வேலி, மந்தாரக்குப்பம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு மினி பஸ் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனம், சுரங்கங்கள், தலைமை அலுவலகம், நிர்வாக அலுவலகம், பள்ளிகள், கல்லுாரிகள் உட்பட பல இயங்கி வருகின்றன. இங்கு வெளிமாவட்டம் மட்டுமில்லாமல் ஒடிசா, பீகார், ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால் நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து அருகில் உள்ள மந்தாரக்குப்பம், வடலுார், இந்திராநகர், முத்தாண்டிகுப்பம், உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பஸ்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. இதனால் பல மணிநேரம் பஸ்சிற்காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.