ADDED : செப் 04, 2025 07:11 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மனநலம் பாதித்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
பரங்கிப்பேட்டை அடுத்த தோப்பிருப்பு தைக்கால் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 35; மனநலம் பாதித்தவர். சலுான் கடையில் வேலை செய்துவந்த இவர் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டில் துாக்குப்போட்டு கொண்டார்.
சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.