ADDED : ஜூன் 24, 2024 05:30 AM
விருத்தாசலம் : அரியலுார் மாவட்டம், செந்துறை வட்டம், சன்னாசி நல்லுாரை சேர்ந்தவர் செல்லவேல் மகன் அன்புமணி, 21. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக, ஆசை வார்த்தை கூறி, பல முறை பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கீதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அன்புமணியை கைது செய்தார்.