/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் 'குட்கா' விற்க முயற்சி 3 பேர் கைது: ரூ.1.50 லட்சம் பறிமுதல் கடலுாரில் 'குட்கா' விற்க முயற்சி 3 பேர் கைது: ரூ.1.50 லட்சம் பறிமுதல்
கடலுாரில் 'குட்கா' விற்க முயற்சி 3 பேர் கைது: ரூ.1.50 லட்சம் பறிமுதல்
கடலுாரில் 'குட்கா' விற்க முயற்சி 3 பேர் கைது: ரூ.1.50 லட்சம் பறிமுதல்
கடலுாரில் 'குட்கா' விற்க முயற்சி 3 பேர் கைது: ரூ.1.50 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூன் 24, 2024 05:35 AM
கடலுார், : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கம்மியம்பேட்டை சுடுகாடு அருகில் சாக்கு மூட்டைகளுடன் நடந்து வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் ஏழுமலை மகன் சண்முக சுந்தரம்,33; கடலுார், கூத்தப்பாக்கம் பாபு, 44; புதுச்சேரி, முள்ளோடை முருகன்,54; என்பது தெரிந்தது.
இவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை புதுச்சேரியில் இருந்து கடலுாரில் விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து சண்முகசுந்தரம் உட்பட 3 பேரையும் கைது செய்து, ரூ.1.50 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ.62 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.