கடலுார்: பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த வசந்தராயன்பாளையத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் யுவஸ்ரீ, 21; பி.ஏ., படித்துள்ளார். கடந்த 9ம் தேதி கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு எழுத சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின்பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.