ADDED : ஜூலை 11, 2024 05:36 AM

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகத்ரட்சகன், 62. இவரும், அதே பகுதியை சேர்ந்த பர்கத், 49, என்பவரும், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ வழக்கு பதிந்து ஜெகத்ரட்சகன், பர்கத் இருவரையும் கைது செய்தனர்.