ADDED : ஜூலை 11, 2024 05:36 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே தி.மு.க., அரசை கண்டித்து துண்டு பிரசுரங்களை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் போதை பொருள் மற்றும் தொடர் படுகொலைகளைதடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர். துண்டு பிரசுரங்களை, பொதுமக்களிடம் பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
நிகழ்ச்சியில், குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், ரவி,முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் மகேஷ், நிர்வாகிகள் பாலமுருகன், மகேந்திரன், ராமையன், முகமது அலி, வசந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.