ADDED : ஜூலை 12, 2024 05:56 AM

நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. 36 மாணவ மாணவிகள் 100 குறள்களுக்கு ஒப்பித்து பாராட்டு பெற்றனர். அவர்களுக்கு உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மூத்த குடிமக்கள் நல சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் நடராஜன், தலைமையாசிரியர் தேவனாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.