Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆபாச படங்களை வெளியிடுவதாக சிறுமிக்கு மிரட்டல்; ஆந்திரா வாலிபர் 'போக்சோ'வில் கைது

ஆபாச படங்களை வெளியிடுவதாக சிறுமிக்கு மிரட்டல்; ஆந்திரா வாலிபர் 'போக்சோ'வில் கைது

ஆபாச படங்களை வெளியிடுவதாக சிறுமிக்கு மிரட்டல்; ஆந்திரா வாலிபர் 'போக்சோ'வில் கைது

ஆபாச படங்களை வெளியிடுவதாக சிறுமிக்கு மிரட்டல்; ஆந்திரா வாலிபர் 'போக்சோ'வில் கைது

ADDED : ஜூன் 17, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம் : சிதம்பரம் அருகே 16வயது சிறுமியின் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய ஆந்திர வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மல்லானுார் பகுதியை சேர்ந்தவர் கேசவன் மகன் கிரண்குமார், 21; பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும், கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆன்லைனில் பிரீ பையர் விளையாடும்போது பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம், காதலாக மாறியுள்ளது. அப்போது, இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது புகைப்படங்களை பரிமாறி வந்ததாக கூறப்படுகிறது. கிரண்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில வாரங்களாக அவருடன் பேசுவதை, சிறுமி நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிரண்குமார், சிறுமியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலிசார் வழக்கு பதிந்து, கிரண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us