Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

ADDED : ஜூன் 08, 2024 04:57 AM


Google News
சிதம்பரம் : நாட்டு வெடி தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில், அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்வதாக, தகவல் கிடைத்தது. அதன்பேரில், அண்ணாமலை நகர் போலீசார், சாலியந்தோப்பு சாரதாராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், 54; என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், அனுமதியின்றி, நாட்டு வெடி தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிந்து, வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us