Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உளுத்துார் தேவாலயத்தில் ஆடம்பர தேர் பவனி

உளுத்துார் தேவாலயத்தில் ஆடம்பர தேர் பவனி

உளுத்துார் தேவாலயத்தில் ஆடம்பர தேர் பவனி

உளுத்துார் தேவாலயத்தில் ஆடம்பர தேர் பவனி

ADDED : ஜூலை 28, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
புவனகிரி : புவனகிரி அடுத்த உளுத்தூர் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்தது.

தேவாலயத்தில் இந்த ஆண்டு பங்கு விழா கடந்த 19ம் தேதி, மறை மாவட்ட முதன்மை குரு ஆல்பர்ட் தம்பிதுரை தலைமையில் துவங்கியது. உளுந்தூர்பேட்டை ரட்சகர் முன்னிலையில் தினசரி சிறப்பு திருப்பலி நடத்தினர். நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு ரட்சகர், சாமுவேல், பங்குத்தந்தை ஜெஸ்டின் ஆரோக்கியராஜ் ஆகியோரால் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இரவு 9.00 மணிக்கு அலங்கரிப்பட்ட புனித அன்னம்மாள் ஆடம்பர தேர் பவனி நடந்தது. திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us