ADDED : ஜூலை 28, 2024 04:58 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் கனகலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், வரும் கல்வி ஆண்டில் நுாறு சதவீதம் தேர்ச்சிக்கு அனைவரும் பாடுபடுதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தல், மாணவர்களின் ஒழுக்கம், கல்வி வளர்ச்சிக்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.