/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணாடம் பெண்கள் பள்ளியில் 'தினமலர் - -பட்டம்' இதழ் வழங்கல் பெண்ணாடம் பெண்கள் பள்ளியில் 'தினமலர் - -பட்டம்' இதழ் வழங்கல்
பெண்ணாடம் பெண்கள் பள்ளியில் 'தினமலர் - -பட்டம்' இதழ் வழங்கல்
பெண்ணாடம் பெண்கள் பள்ளியில் 'தினமலர் - -பட்டம்' இதழ் வழங்கல்
பெண்ணாடம் பெண்கள் பள்ளியில் 'தினமலர் - -பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 28, 2024 04:58 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உட்பட பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு, பட்டம் இதழ் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை சற்குணாம்பிகை தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலை., தொலைக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் லெனின் மாணவர்களுக்கு பட்டம் இதழ்களை வழங்கினார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் வெங்கடேசன், காயத்திரி, ஆசிரியர்கள் மணிவண்ணன், அனிதா, ராணி, மகேஸ்வரி, காமாட்சி, மஞ்சுளா, கலைச்செல்வி, மைய மேலாளர் வேல்முருகன், மைய பணியாளர்கள் அனிதா, பரமேஸ்வரி, சிவசங்கரி, சுகுணா, சவுந்தர்யா, லட்சுமி, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.