Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாம்பு கடித்து மாணவி இறப்பு

பாம்பு கடித்து மாணவி இறப்பு

பாம்பு கடித்து மாணவி இறப்பு

பாம்பு கடித்து மாணவி இறப்பு

ADDED : ஜூன் 06, 2024 03:05 AM


Google News
குள்ளஞ்சாவடி: கடலுார் அடுத்த தம்பிப்பேட்டை பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்குமார் மகள் பிரதிக்ஷா,18; செஞ்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம்., படித்து வந்தார்.

விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த பிரதிக்ஷா நேற்று விடியற்காலை 5:30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள நிலத்திற்கு சென்றபோது, பாம்பு கடித்தது. உடன் வீட்டிற்கு வந்த அவர் மயங்கி விழுந்தார்.

உடன் அவரை அவரது பெற்றோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.

குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us