Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

ADDED : ஜூன் 10, 2024 01:12 AM


Google News
விருத்தாசலம் : லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ., கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

இதில், பிரதமர் மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார்.

அதையொட்டி, விருத்தாசலம் அடுத்த குருவன் குப்பம் கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில செயலர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி செயலர் இளையராஜா, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய தலைவர் தாமரைக்கனி, கிளை தலைவர் கார்த்தி, நிர்வாகிகள் ரீகன், ராஜசேகர், பிரபாகரன், கஜேந்திரன், சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us