/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 21, 2024 06:15 AM
கடலுார்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் விடுத்துள்ள அறிக்கை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சதி திட்டம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இந்த கொலை நடந்தும் போலீசுக்கு தெரியாமல் போனது எப்படி என தெரியவில்லை. இக்கொலையில் பல மர்மங்கள் இருப்பதால் ்வழக்கை சி.பி.ஐ., க்கு மாற்ற வேண்டும். இக்கொலையில் ஈடுபட்டவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் துணைவியார் மற்றும் குழந்தைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.