நாயுடு சங்க கிளை அலுவலகம் திறப்பு
நாயுடு சங்க கிளை அலுவலகம் திறப்பு
நாயுடு சங்க கிளை அலுவலகம் திறப்பு
ADDED : ஜூலை 10, 2024 04:21 AM

கடலுார் : கடலுாரில் திருப்பாதிரிப்புலியூர் நாயுடு சங்க கிளை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
சங்கத் தலைவர் அனந்தாழ்வார் தலைமை தாங்கினார்.
மாதர் நல தொண்டு நிறுவனம் ராஜேந்திரன், புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். ஏற்பாடுகளை செயலாளர் தாமோதரன், துணைத் தலைவர் ராஜசேகர், இணை செயலாளர் சந்தானகிருஷ்ணன், சீனுவாசன், பொருளாளர் வேங்கடபதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.