Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வசந்தம் கருத்தரிப்பு மையத்தில் நவீன செயற்கை முறை சிகிச்சை

வசந்தம் கருத்தரிப்பு மையத்தில் நவீன செயற்கை முறை சிகிச்சை

வசந்தம் கருத்தரிப்பு மையத்தில் நவீன செயற்கை முறை சிகிச்சை

வசந்தம் கருத்தரிப்பு மையத்தில் நவீன செயற்கை முறை சிகிச்சை

ADDED : ஜூலை 28, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
குழந்தை இல்லாத தம்பதியருக்கு நவீன செயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என, கடலுார், சொரக்கல்பட்டு வசந்தம் மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மையத்தின் டாக்டர் காயத்ரி கூறினார்.

இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது:

தம்பதியருக்கு குழந்தை இல்லாமல் போவதற்கு ஆண், பெண் சார்ந்த பிரச்னையாக இருக்கலாம். ஆண்களுக்கு உயிரணுக்கள் இல்லாமை, குறைந்த உயிரணுக்கள், விதை பையில் ரத்த நாளங்கள் வீக்கம், ஹார்மோன் குறைபாடு போன்ற கராணங்கள் இருக்கலாம்.

பெண்களுக்கு கருக்குழாயில் அடைப்பு, தரமில்லாத கரு முட்டைகள், சினைப்பையில் நீர் கட்டிகள், கர்ப்ப பையில் கட்டிகள், ஹார்மோன் ஆகிய குறைபாடுகளால் குழந்தை கரித்தரிக்காமல் இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகள் உள்ள தம்பதியர் செயற்கை முறையில் குழந்தை பெறலாம். ஆணின் விந்தணுக்களை கர்ப்ப பைக்குள் நேரடியாக செலுத்தும் (ஐ.யூ.ஐ) செயற்கை முறையில் குழந்தை பெறலாம்.

இதேப் போன்று பெண்ணின் சினைப்பையில் இருந்து முட்டைகளை எடுத்து விந்தணுக்களுடன் கலந்து ஆய்வகத்தில் வைத்து கரு உருவாகிய உடன் மீண்டும் கர்ப்ப பைக்குள் செலுத்தும் (ஐ.யூ.எப்.,-ஐ.சி.எஸ்.ஐ) செயற்கை முறையில் குழந்தைகள் பெறலாம்.

வசந்தம் மருத்துவமனையில் ஐ.யூ.ஐ.,-ஐ.யூ.எப்.,-ஐ.சி.எஸ்.ஐ ஆகிய சிகிச்சை முறைகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us