ADDED : ஜூன் 06, 2024 02:45 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வீடு தீப்பிடித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.
சேத்தியாத்தோப்பு அருகே இடையன்பால்சொரி கிராமத்தில் உள்ள செந்தில் வள்ளி தம்பதியரின் குடிசை தீப்பிடித்து எரிந்து பொருட்கள் சேதமானது. தகவலறிந்த புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.,அருண்மொழிதேவன் நேரில் சென்று ஆறுதல் கூறி அரிசி, பணம் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் கருப்பன், விநாயகமூர்த்தி, நல்லுார் ஒன்றிய செயலாளர் முத்து மற்றும் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.