ADDED : ஜூன் 18, 2024 05:32 AM
கிள்ளை: கிள்ளை அருகே குடும்ப பிரச்னை காரணமாக, துாக்குப்போட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கிள்ளை அடுத்த கொடிப்பள்ளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் தாமோதரன், 54; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தாமோதரன் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததை மனைவி கண்டித்துள்ளார். இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த தாமோதரன் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.