ADDED : ஜூன் 18, 2024 05:31 AM
கிள்ளை: கிள்ளையில், புளியமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கிள்ளை குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் விசுவநாதன், 60; தொழிலாளி. இவர், கடந்த 14ம் தேதி கிள்ளைகாமன் கோவில் தெருவில் புளியமரத்தில் ஏறி, புளியபழம் பறித்தார். அப்போது, மரத்தில் இருந்து விசுவநாதன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.