Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபரை கத்தியால் வெட்டியவருக்கு வலை

வாலிபரை கத்தியால் வெட்டியவருக்கு வலை

வாலிபரை கத்தியால் வெட்டியவருக்கு வலை

வாலிபரை கத்தியால் வெட்டியவருக்கு வலை

ADDED : ஜூன் 22, 2024 04:16 AM


Google News
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த அயன் அகரம் பகுதியை சேர்ந்தவர், பாக்கியராஜ் மகன் அஸ்வின், 20. இவருக்கும் வெங்கட்டம்மாள்புரம் பகுதியை சேர்ந்த ராஜி மகன் ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் அஸ்வின் தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அவரை வழிமறித்த ராஜேஷ் கத்தியால், அஸ்வினின் கழுத்து மற்றும், தோள்பட்டையில் வெட்டினார். படுகாயமடைந்த அஸ்வின் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அவரது தாய் எழிலரசி, குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து ராஜேஷை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us