Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஹோட்டலில் திருட்டு: புவனகிரியில் துணிகரம்

ஹோட்டலில் திருட்டு: புவனகிரியில் துணிகரம்

ஹோட்டலில் திருட்டு: புவனகிரியில் துணிகரம்

ஹோட்டலில் திருட்டு: புவனகிரியில் துணிகரம்

ADDED : ஜூன் 04, 2024 11:56 PM


Google News
புவனகிரி: புவனகிரி அருகே ஹோட்டலின் பூட்டை உடைத்து, ரூ.50 ஆயிரம் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிதம்பரம்-புவனகிரி சாலை, கீரப்பாளையத்தில் மகாராணி என்ற பெயரில் ஹோட்டல் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில், மர்ம நபர்கள், ஹோட்டல் பூட்டை உடைத்து, பெட்டியில் இருந்த ரூ. 50 ஆயிரத்தை திருடி சென்றனர்.

நேற்று காலை உரிமையாளர் ஹோட்டலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பணம் திருடு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், புவனகிரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கடந்த மாதத்தில் இருந்து புவனகிரி, கீரப்பாளையத்தில் போலீசாருக்கு சவால் விடும் நோக்கில் நடந்து வரும் திருட்டு சம்பவத்தால் அப்பகுதியினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இது வரை நடந்த திருட்டு சம்பவத்தில் ஒருவரை கூட போலீசார் பிடிக்காமல் அலட்சியமாக உள்ளதால், திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us