ADDED : ஜூன் 16, 2024 10:51 PM
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சி.என்.பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சி.என்.பாளையம் இடையர்குப்பம் குணசுந்தரி,30; தமது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 240 பாக்கெட் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து குணசுந்தரியை கைது செய்தனர்.