Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விக்கிரவாண்டியில் உளவு பார்க்க கடலுார் டீம் பயணம்

விக்கிரவாண்டியில் உளவு பார்க்க கடலுார் டீம் பயணம்

விக்கிரவாண்டியில் உளவு பார்க்க கடலுார் டீம் பயணம்

விக்கிரவாண்டியில் உளவு பார்க்க கடலுார் டீம் பயணம்

ADDED : ஜூலை 10, 2024 04:38 AM


Google News
சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஜாதிய ரீதியான மோதல்கள், அரசியல் சம்பவங்கள் போன்றவைகளை, முன்கூட்டியே உளவறிந்து, அரசுக்கு தெரியப்படுத்த, காவல் துறையில் உளவு பிரிவு (எஸ்.பி., சி.ஐ.டி.,) செயல்படுகிறது. மாவட்டத்தில், இப்பிரிவிற்கென இன்ஸ்பெக்டர் தலைமையில் தனி டீம் செயல்படுகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் இன்று (10ம் தேதி) நடக்கிறது.

அந்த தேர்தலில் உளவு பணிக்கு, கடலுார் மாவட்டத்தில் இருந்து 10 உளவு பிரிவு போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

பொதுமக்களோடு கலந்து, தொகுதியில் தேர்தல் நிலவரம் குறித்து முழுவதும் அலசி ஆராயும் பணியில் அவர்கள் ஈடுபட உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us