/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
ADDED : ஜூலை 25, 2024 06:14 AM

நெய்வேலி: மந்தாரக்குப்பத்தில் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை நெய்வேலி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் கிருஷ்ணமூர்த்தி. 22; இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியுள்ளார். தற்போது சிறுமி கர்ப்பமானார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், நெய்வேலி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.