ADDED : ஜூலை 25, 2024 06:15 AM

கடலுார்: மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
கடலுார், செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகள் டிம்பிள்,36; ஆசிரியராக பணிபுரிந்த அவர்மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 18ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றவரை காணவில்லை. இதுகுறித்து அவரது கணவர் கிருஷ்ணனிடம் தெரிவித்தும் எந்த தகவலும்இல்லை.
இதுகுறித்து டிம்பிளின் தாய் விஜயலட்சுமி அளித்த புகாரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.