/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கம்ப்யூட்டர் சென்டரில் மாணவர் திடீர் சாவு கம்ப்யூட்டர் சென்டரில் மாணவர் திடீர் சாவு
கம்ப்யூட்டர் சென்டரில் மாணவர் திடீர் சாவு
கம்ப்யூட்டர் சென்டரில் மாணவர் திடீர் சாவு
கம்ப்யூட்டர் சென்டரில் மாணவர் திடீர் சாவு
ADDED : ஜூலை 25, 2024 06:14 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் மாணவர் மூச்சுத்திணறி இறந்ததால் பரபரப்பு நிலவியது.
வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் அரவிந்த், 18. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் டேலி படித்து வந்தார். நேற்று பகல் 12:00 மணியளவில், வகுப்பறையில் அமர்ந்திருந்த அரவிந்த், திடீரென மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்சில், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது தாய் செந்தமிழ்ச்செல்வி புகாரில், தனது மகனுக்கு வீசிங் பிரச்னை இருப்பதால், மருந்துகள் சாப்பிட்டு வருவதாகவும், சாவில் சந்தேகம் இல்லை என தெரிவித்தார். அதன்பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கம்ப்யூட்டர் சென்டர் வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.