ADDED : ஜூன் 15, 2024 05:40 AM

சிதம்பரம்: குமராட்சி அரசு பள்ளியில் நடந்த புத்தகம் வழங்கும் நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டிற்கான புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பிரணவ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் ரங்கநாதன், வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜமோகன் பங்கேற்றனர்.